×

வேளாண் மாணவர்கள் பார்வையிட்டனர் உலக செஸ் சாம்பியனுக்கு கலெக்டர் பாராட்டு

 

ஜெயங்கொண்டம் மே4: தமிழ்நாடுமாநில,தேசிய, ஆசிய, காமன்வெல்த் சதுரங்க போட்டிகளில் தங்கப் பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்றதை தொடர்ந்து உடையார்பாளையத்தை சேர்ந்த சர்வாணிகா இளம் சாதனையாளர் விருது பெற்றும், தற்போதுஐரோப்பிய நாடான அல்பேனியாவில் ஏப்ரல் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற்ற உலக சதுரங்க சாம்பியன்ஷிப்-2024 கலந்து கொண்டுபோட்டிகளில் 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் Rapid பிரிவில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா சர்வாணிகா(9) இந்தியா சார்பில் கலந்து கொண்டு மொத்தம் 11 சுற்றுகளில் 9ல் வெற்றிகளைப் பெற்று தங்கம் வென்று,உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். சர்வாணிக்கா நேற்று உடையார்பாளையத்திற்கு வருகை புரிந்தார். அப்போது உடையார்பாளையம் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வந்திருந்த மாவட்ட கலெக்டர் ஆனி மேரி சுவர்ணா, ஆர்டிஓ ஷீஜா மற்றும் தாசில்தார் கலிலூர் ரஹ்மான் உள்ளிட்ட பலர் தங்கப்பதக்கம் பெற்று வந்த உலக செஸ் சாம்பியன் சர்வானிகாவை வாழ்த்தி பாராட்டினர்.

The post வேளாண் மாணவர்கள் பார்வையிட்டனர் உலக செஸ் சாம்பியனுக்கு கலெக்டர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Jayangkondam ,Tamil Nadu ,State, ,National, ,Chess Tournaments ,Sarvanika ,Vodyarpalayam ,Albania ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே அம்மன் கழுத்தில்...